×

நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டத்தின் கீழ் மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில், அக். 15: குமரி மாவட்ட கலெக்டர் தர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு முழுமைக்குமான “நம்ம ஊரு சூப்பரு” – இயக்க சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்வது தொடர்பான செயல்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி மற்றும் இதர அலுவலக சுகாதார பணியாளர்களை இணைக்க வேண்டும். மக்களைத்தேடி மருத்துவம் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து தோட்டங்கள், மரம் நடுதல், பசுமை தோட்டங்கள் அமைத்தல் மூலம் கிராமத்தினை பசுமையான கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தூய்மை பாரத இயக்க – சுகாதார செய்திகளை கிராமிய கலை மூலம் ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்தி தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீடுகள் அளவில் குப்பைகளை 100% தரம்பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை கடைகள் மற்றும் வியாபார தலங்களில் பயன்பாட்டினை தடை செய்தல், நெகிழிக்கு மாற்று பயன்பாட்டினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பட்டறிவு பயணம் மூலம் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இந்த செயல்பாடுகளில் ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என பல்வேறு துறைகளை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து பகுதி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

The post நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டத்தின் கீழ் மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Namma Uru Suparu movement ,Nagercoil ,Kumari District ,Collector ,thar ,Swachh Bharat Movement ,
× RELATED வெளிநாடுகளில் உயர்படிப்பு தொடரும்...